நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எல்லைக் கோடு:  தேன்ராஜா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

எல்லைக்கோடு
மனிதனை தவிர
மற்ற உயிரினங்களுக்கு 
இல்லை
இக்கோடு .....
 
பறவையின்
வலசை  கண்டம்
தாண்டும்
அவைகளுக்கு
வானமே எல்லை..... ..
 
மீனினமோ
கடல் விட்டு
கடல் போகும்
அவைகளுக்கு 
கரைகளே 
எல்லை ......
 
கற்பனை கோடு 
ஒன்றை
வரைந்தான்
மனிதன்
தற்பெருமை
அடைந்தான்
அதன் மூலம் ..
 
கடவுள் படைத்த
உலகத்தை
கண்ணுக்கு
தெரிந்த வரை
பிரிக்கிறான் 
கடவுள்
படைத்த மனிதன் .... ...
 
ஆறறிவு
பெற்றுவிட்டதால்
அகிலத்தை ஆள 
நினைக்கிறான்
ஆசை கொண்ட
மனிதன் ....
 
ஐந்தறிவு 
விலங்குகள் கூட
ஆராய்ந்து
பார்ப்பதில்லை
அதனதன்
எல்லையை .....
 
எல்லைக்கோடு 
மனிதனை தவிர
மற்ற உயிரினங்களுக்கு 
இல்லை
இக்கோடு .....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.